Sunday, May 2, 2010

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் ஆடைத் தொழிற்சாலை அமைக்க முடிவு


வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பல ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு கைத்தொழில், வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஆடைத் தொழிற்சாலைகள் மூலம் நாட்டுக்கு வருடாந்த வருமானமாக கிடைத்துவரும் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதனை இலக்காக வைத்து அதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை அண்மையில் பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதில் நாட்டிலு ள்ள பல முன்னணி ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்களும் கலந்துகொண்டனர்.
MONDAY, MAY 03, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment