
செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் சனிக்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்திருப்பதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
ஹபரவெவ எனும் பிரதேசத்திலுள்ள வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஐவரே மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரதிலக்க (45) மற்றும் ஜயந்த (44) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். செவனகல பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
MONDAY, MAY 17, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment