Sunday, May 2, 2010

கிளிநொச்சி: 4000 குடும்பங்களை மீள்குடியேற்றும் பணிகள் துரிதம்:3700 வீடுகளை கட்டும் நடவடிக்கை ஆரம்பம்


கிளிநொச்சி மாவட்டத்தில் இம்மாத இறுதிக்குள் நான்காயிரம் குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியிருப்போரை கட்டம் கட்டமாக அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சியின் மேற்கு மற்றும் கிழக் கில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் இடங்க ளைச் சேர்ந்தோர் தொடர்பான பெயர், விவரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் மேலும் கூறினார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 3700 வீடுகள் கட்டும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு வீட்டு நிர் மாணத் திட்டத்தின் கீழ் 3600 வீடுகளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் 100 வீடுகளுமே அமைக்கப்படவுள்ளன. யு. என். ஹெபிட்டாட் சேதமடைந்த 1500 வீடுகளை புனர்நிர்மாணம் செய்துகொடுக்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 30 பாடசாலைகள் தற்போது இயங்கி வரு கின்றன. மோதல்களால் இடம்பெயர்ந்து மீண்டும் தமது சொந்த இடங்களில் குடி யேறியுள்ளோர் இதுவரையில் 5 ஆயிரத்து 850 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச் செய் கையினையும் சிறிய அளவில் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டுள் ளனர்.

பூநகரில் சிறியளவில் மீளக் குடி யமர்த்தப்பட்டிருக்கும் மீனவக் குடும்பங்கள் தமது மீன்பிடித் தொழிலை ஆரம்பித் திருப்பதாகவும் அடுத்த வாரமளவில் அவர் களுக்கான வலைகள் மற்றும் வள்ளங்கள் பெற்றுக்கொடுக்கப்படவிருப்ப தாகவும் அரசாங்க அதிபர்
தெரிவித்தார்
MONDAY, MAY 03, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment