Monday, May 24, 2010

பதிவு செய்யப்படாத தெரு விளக்குகளால் வருடாந்தம் ரூ. ஒன்றரை பில்லியன் நட்டம்:ஜூன் 1 முதல் இவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை



பதிவு செய்யப்படாத தெரு விளக்குகளி னால் வருடமொன்றுக்கு ஏற்படும் ஒன்றரை பில்லியன் ரூபா நட்டத்தினை இனிமேலும் பொறுப்பேற்க இலங்கை மின்சார சபை தயாரில்லையென மின்சக்தி வலு சக்தியமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஜூன் முதலாம் திகதி முதல் இவ்வாறான தெரு விளக்குக ளுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக் கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

உரிய முறையில் பதிவு செய்யப்படாத சுமார் 3 இலட்சம் வரையிலான தெரு விளக்குகள் நாடளாவிய ரீதியில் இயங்கி வருவது கணக்கெடுப்புகளிலிருந்து தெரிய வந்துள்ளது. தெரு விளக்குகளுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் 150 ஜிகா வெக்ற் மின்சாரத்தில் 52 ஜிகா வெக்ற் மின்சாரம் பதிவு செய்யப்படாத தெரு விளக்குகளுக்கே செலவிடப்படுகின்றன. இந்நிலை தொட ருமாயின் மின் விநியோகத் திட்டம் முழுவதுமே சரிவடையும் அபாயத்தை எதிர்நோக்க நேரிடுமெனவும் அமைச்சர் சம்பிக்க சுட்டிக்காட்டினார்.

இலங்கை மின்சார சபையில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்ட கருத்துகளை கூறி னார். அமைச்சருடன் இலங்கை மின்சார சபைத் தலைவர் வித்யா அமரபால, நடவடிக்கைகள் பணிப்பாளர் ரொஷான் குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி மன்றங்களினூடாகவே பெரும்பாலான தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே முதற் கட்டமாக நாம் இதற்கு உடனடி நடவடிக்கையெடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கவுள்ளோம். இலங்கை மின்சார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 3 இலட்சத்து 40 ஆயிரத்து 308 தெரு விளக்குகள் உள்ளன. இதனைத் தவிர லெக்கோ நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 60 ஆயிரம் தெரு விளக்குகள் உள்ளன.
இவற்றைத் தவிர்ந்த ஏனையவை அனைத் தும் உரிய முறையில் பதிவு செய்யப்படாத தெரு விளக்குகளாகவே கணிக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் கூறினார்.
TUESDAY, MAY 25, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment