Wednesday, May 19, 2010

கொழும்பு துறைமுகத்தில் நேற்றிரவு இரசாயன வாயு கசிவு


கொழும்பு துறைமுகத்தில் நேற்று இரவு 8.35 மணியளவில் திடீரென ஏற்ப ட்ட இராசாயன வாயு ஒழுக்கின் காரண மாக கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது.

துறைமுகத்தின் அபாயகரமான பொருட்கள் கையாளும் பிரிவிலிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து குறித்த இரசாயன வாயு ஒழுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் வானில் கரும்புகை மண்டலம் தோன்றியதுடன் சுவாசிப்பதில் பெரும் அசெளகரியங்கள் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கொள்கலன் ஒன்றி லிருந்து நைட்ரிக் அமில வாயு ஒழுக்கின் காரணமாக புகை மாத்திரமே தோன்றியதா கவும், இதனால் தீ ஏற்படவில்லையெனவும் துறைமுகத்தில் கடமையிலிருந்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இரசாயன வாயு ஒழுக்கின் காரணமாக உயிர்களுக்கோ உடமைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைக்கும் படையினர் புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
WEDNESDAY, MAY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment