Sunday, May 2, 2010

புனர்வாழ்வுபணி: கூரைத்தகடுகள் கிடுகுகளை தந்துதவ முடியும் :அமைச்சர் மில்ரோய்


வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வரும் இடங்களில் சேதமடைந்த நிலையில் அரைகுறையாக இருக்கும் வீடுகளை புனரமைக்க ஆகக் குறைந்தது கூரைத் தகடுகள் அல்லது ஓலைக் கிடுகுகளையாவது தந்துதவுமாறு மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, தனவந்தர்கள் மற்றும் சமூக சேவையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதனையடுத்து மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு தான் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டபோது மோதல் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளும் கூரைகளின்றிய நிலையில் இருப்பதனைக் கண்டு தான் வியப்படைந்ததாகவும் அமைச்சர் கூறினார்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் காலகட்டத்தில் படை வீரர்கள் பொதுமக்களின் வீடுகளில் தங்கி விடக் கூடுமென்ற சந்தேகத்தில் அனைத்து வீடுகளின் கூரைகளையும் அகற்றி விடுமாறு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உத்தர விட்டுள்ளார். சில வீடுகளின் கூரைகள் புலிகளினால் பலவந்தமாக அகற்றப்பட்டு ள்ளன.

அதற்கமையவே வீடுகள் கூரையின்றி காட்சியளிக்கின்றன. பெரும்பாலான வீடுகளின் சுவர்களில் எவ்வித சேதமும் இல்லை. கூரை மாத்திரம் இருப்பின் அவ்வீட்டு உரிமையாளர்களால் தாராளமாக அங்கே மீளக்குடியேற முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வீடுகள் மாத்திரமன்றி பாடசாலைகளும் கூரைகளின்றிய நிலையிலேயே காணப்படுகின்றன.
MONDAY, MAY 03, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment