Wednesday, July 14, 2010

போலி நாணயத் தாள் அச்சிட்ட 2 பேர் கைது





ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்ட இருவர் நேற்று கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிட மிருந்து ஒரு இலட்சத்து 77 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்கள் நேற்று வரை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

விஸ்வமடு, முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்டு பல்வேறு இடங்களுக்கும் விநியோகித்து வந்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் வவுனியாவில் வைத்தே போலி நாணயத் தாள்களை அச்சிட்ட பின்னர் கிளிநொச்சிக்கு எடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
THURSDAY, JULY 15, ௨0௧0
லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment