Wednesday, July 21, 2010

அமைச்சர் ஜீ.எல். - நீல்பூனே நேற்று சந்தித்துப் பேச்சு


ஐக்கிய நாடுகள் சபையின் இலங் கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனேக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ¤க்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது பூனே தனது கடமைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க விருப்பதாகவும் ஐ.நா. இலங்கையில் தமது வேலைகளை தொடர்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் பீரிஸிடம் கூறியுள்ளார். இதன்போது இலங்கைக்கும் ஐ.நா.வுக்குமிடையிலான உறவு என்றும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டு மென்பதே அரசாங்கத்தின் விருப்பமெனவும் அமைச்சர் பீரிஸ், பூனேவிடம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. செய லாளர் நாயகம் பான் கீ மூனுடன் கலந்துரையாடுவதற்காக நியூயோர்க் சென்றிருந்த நீல் பூனே நேற்று காலை நாடு திரும்பி பான் கீ மூனின் ஆலோச னைக்கமைய இந்த சந்திப்பில் ஈடுபட்டதாக வும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
WEDNESDAY, JULY 21, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment