Monday, July 19, 2010

டெங்கு ஒழிப்புப் பணி;பொது சுகாதார அதிகாரிகள் மீது தாக்குதல்; உபகரணங்களும் சேதம்


திருகோணமலையில் டெங்கு பெருகக்கூடிய இடங்களை கண்டறிந்து சுத்திகரிப்பதற்காக சென்றிருந்த பொது சுகாதார பரிசோதகர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் சுத்திகரிக்கும் உபகரணமும் சேதமாக்கப்பட்டு ள்ளது.சில வாரங்களுக்கு முன்னர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியொருவரின் தந்தையே மேற்படி சுகாதார பரிசோதகர்களைத் தாக்கியுள்ளார்.

மஹாமாயபுரவைச் சேர்ந்த திசைமுத்து அத்தனி ஜெயராஜ்(38) என்பவரே தாக்குதலை மேற்கொண்டமைக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மஜிஸ்ட்ரேட் முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளார்.

பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தும் குற்றச்சாட்டின் கீழ் இவர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக திருமலை பொலிஸார் தெரிவித்தனர்.
MONDAY, JULY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment