Friday, July 30, 2010

தீக்குளித்தவரை கறுப்பு ஜீப்பில் கொண்டுவந்து இறக்கியவர் யார்?


ஐ. தே. க. தலைமையகத்திற்கு முன்பாக தற்கொலை செய்து கொண்ட ரியன்சி அல்கமவின் மரணத்திற்கு பின்புலமாகயிருக் கும் நபர்கள் மற்றும் அவரை அவ்விடத்திற்கு கொண்டு வந்து இறக்கிய கறுப்பு ஜீப் வண்டி குறித்து தீவிர விசார ணைகள் ஆரம்பிக்கப்பட்டி ருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

ரியன்சி அல்கமவின் மரணம் குறித்து நபரொருவர் பொலிஸா ருக்கு வழங்கியிருக்கும் வாக்கு மூலத்தில், தான் கடையொன்றில் பழம் வாங்கிக் கொண்டிருக்கும் போது கறுப்பு நிற ஜீப் வண்டியொன்று அவ்வழியாக வந்ததாகவும் அதிலிருந்து கொள்கலன் ஒன்றுடன் இறங்கிய ஒருவர் நீண்ட நேரமாக அவ்விடத்தில் நின்று வண்டியி னுள் இருந்த இன்னுமொரு வருடன் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் நான் வீட்டுக்குச் சென்று தொலைக் காட்சியை பார்த்தபோது குறித்த நபர் தீப்பற்றிய நிலையில் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்வதைக் கண்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் கறுப்பு நிற ஜீப் வண்டி மற்றும் அதனுள் இருந்த நபர் குறித்து விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்

FRIDAY, JULY 30, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment