Wednesday, September 16, 2009

சிறைக்காவலர் 30 கஞ்சா பக்கற்றுகளுடன் கைது


பலபிட்டிய சிறைச்சாலை காவலாளியொருவர் 30 கஞ்சா பக்கட்டுக்களுடன் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பொது மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரோஹண கமகே தெரிவித்தார்.


மேற்படி காவலாளிக்கு கஞ்சா பக்கற்றுக்களை விநியோகித்த பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். சிறைச்சாலைக்குள்ளிருந்து வெளியே வந்த காவலாளி வீதியின் எதிரே நின்று கொண்டிருந்த பெண் ஒருவரிடமிருந்து 30 கஞ்சா பக்கற்றுக்களைப் பெற்றுக்கொள்ளும்வேளை பொலிஸார் இவ்விருவரையும் கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்.


விசாரணைகளுக்குப் பின்னர், கைது செய்யப்பட்டிருக்கும் பெண்ணின் கணவர் ஏற்கனவே கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருப்பவரெனத் தெரியவந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
WEDNESDAY, SEPTEMBER 16, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment