Tuesday, September 1, 2009

வாஸின் மகன் உட்பட ஐவர் அடையாளம் காணப்பட்டனர்


மாலபே தகவல் தொழில் நுட்பக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் வாஸ் குணவர்தனவின் மகன் உட்பட ஐவர் அடையாளம் காணப்பட்டி ருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க கூறினார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வாஸ் குணவர்தனவின் மகன் மேற்குறிப்பிட்ட கல்லூரி மாணவனான நிபுண என்பவரை சில பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் கடத்திச் சென்று தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வாஸ் குணவர்தனவின் மனைவி, மகன் மற்றும் 14 பொலிஸ் அதிகாரிகள், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அதன் பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்TUESDAY, SEPTEMBER 01, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment