Monday, September 21, 2009

வடக்கில் விவசாய அபிவிருத்திகளை துரிதப்படுத்த இந்திய அரசு முன்வருகை


வடக்கில் விவசாயி அபிவிருத்திகளை துரிதப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.

வவுனியாவுக்கு விஜயம் செய்த இந்திய விவசாய நிபுணர்கள் குழு, இது தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.

இதன்போது விவசாய அபிவிருத்திகளை துரிதப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குமென தெரிவித்த இந் நிபுணர்கள் குழு, மிக விரைவில் பல்வேறு திட்டங்களை அமைத்துக் கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் கூறினார். வவுனியாவில் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை களஞ்சியப்படுத்தி வைக்கக் கூடிய வகையில் பாரிய களஞ்சியசாலையொன்றை அமைத்துத் தருவதாகவும் இந்திய நிபுணர்கள் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனைவிட 500 லீற்றர் பால் சேகரிக்கும் நிலையம் மூன்று சூடடிக்கும் இடங்கள், கால்நடை பண்ணை, கோழிப்பண்ணை ஆகியவற்றை தமது முழுச் செலவில் அமைத்துக் கொடுப்பதற்கும் இக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
வவுனியாவிலிருக்கும் மூன்று விவசாய நிலங்களுக்கும் தேவையான அனைத்து இயந்திரங்களும் பெற்றுக் கொடுக்கப்படும் இதேவேளை விவசாயிகளுக்கு விசேட பயிற்சிகள் மற்றும் தொழில் நுட்ப அறிவைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமெனவும் இந்தியக் குழு அரசாங்க அதிபரிடம் வாக்குறுதியளித்துள்ளது.

வவுனியா விவசாயக் கல்லூரியை அதி தொழில்நுட்பத்துடன் கூடிய கல்லூரியாக மாற்றியமைக்கும் அதேவேளை குளங்கள், கால்வாய்கள் என்பவற்றை திருத்திக் கொடுப்பதாக கூறியதாவும் அரசாங்கம் அதிபர் தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டதற்கமைய அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கான அனைத்து வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்த இந்திய விவசாய நிபுணத்துவக்குழு இதேவேலைத் திட்டங்களை வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கவிருப்பதாக தெரிவித்ததாகவும் அரசாங்க அதிபர் நேற்று கூறினார்.
MONDAY, SEPTEMBER 21, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment