Tuesday, September 8, 2009

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயின் கடத்த முற்பட்ட பாகிஸ்தான் பிரஜை கைது


இலங்கைக்குள் ஹெரோயினைக் கடத்த முற்பட்ட பாகிஸ்தானியப் பிரஜையொருவர் நேற்று கையும் மெய்யுமாக கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 14 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே மேற்படி பாகிஸ்தானிய பிரஜை பொலிஸ் போதை தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பேச்சாளர் மெத்திவக்க கூறினார்.
TUESDAY, SEPTEMBER 08, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment