Monday, September 21, 2009

அமைச்சர் முரளி பயணித்த வாகனம் கொழும்பில் விபத்து


தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பயணித்த ஜீப் வாகனம் நேற்று விபத்துக்குள்ளானது. இதில் அமைச்சர் தெய்வா தீனமாக உயிர் தப்பினாரென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிமல் மெத்திவக்க கூறினார்

கொழும்பு, கறுவாத்தோட்டம் ஃப்ளவர் வீதி ஜே. ஓ. சி. சுற்று வட்டத்துக்கு அருகாமையில் வைத்து நேற்று மாலை 4.45 மணியளவில் இவ்விபத்து நடந்துள்ளது. அமைச்சர் சென்ற ஜீப் வாகனத்துடன் ‘154’ இலக்க தனியார் பயணிகள் பஸ் வண்டி மோதியதிலேயே விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் காரணமாக அமைச்சரின் மெய்பாதுகாவலாளியும் வாகனச் சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக கூறினார்
MONDAY, SEPTEMBER 21, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment