
இலங்கையில் முதல் தடவையாக ஆறு நட்சத்திர ஹோட்டலொன்று அமைக்கப்படவுள்ளது. கற்பிட்டி பகுதியில் அமைக்கப்படவிருக்கும் இந்த ஹோட்டலுக்கான அடிக்கல் இன்று காலை நடப்படும்.
உலகிலேயே முன்னணியில் திகழும் ஹோட்டல் நிர்வாக நிறுவனமான ‘சிக்ஸ் சென்ஸஸ்’ இந்த ஆறு நட்சத்திர ஹோட்டலை முகாமைத்துவம் செய்யவிருப்பது இலங்கையின் சமாதானத்துக்கும் புகழுக்கும் கிடைத்திருக்கும் பெரும் கீர்த்தி என சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலாச் சபையில் நேற்று மாலை, கற்பிட்டியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ‘டச் பே ரிசோட்’ எனும் ஆறு நட்சத்திர ஹோட்டல் குறித்து விளக்கும் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.
இதில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் சுமார் 30 வருடகாலமாக நீடித்துவந்த பயங்கரவாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முடிவுக்கு வந்ததையடுத்து சர்வதேச தரம் கொண்ட நிறுவனங்கள் நாட்டில் முதலீடு செய்யவும் முகாமைத்துவம் செய்யவும் முன்வந்துள்ளன. இதன் மூலம் சுற்றுலாத்துறை என்றுமில்லாதவாறு உயர்ந்த ஸ்தானத்தை அடையவுள்ளதெனவும் அவர் தெரித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் சுற்றுலா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ‘டச்பே ரிசோட்ஸ்’ தலைவர் நீல் த சில்வா, இலங்கை சுற்றுலாத்துறை ஊக்கவிப்பு பணியகத்தின் தலைவர் பேர்னார்ட் குணதிலக்க, டச்பே ரிசோட்ஸ் பிரதம அபிவிருத்தி அதிகாரி பெட்ரிக் கூட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் நவீன் திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில்:- உலகின் முன்னணியில் திகழும் ‘சிக்ஸ் சென்ஸஸ்’ நிறுவனம் இலங்கை கரையோரத்துக்கு வருவது எமது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும். இது நீண்ட கால திட்டமாகும். 2011 இல் இது நிறைவு பெறுமென எதிர்ப்பாக்கின்றோம். ஆறு நட்சத்திர ஹோட்டலை அமைப்பதன் மூலம் 2010 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கற்பிட்டி டச்பே தீவில் 09-09-2009 ஆம் திகதியாகிய இன்று காலை 9 மணி 9 நிமிடமும் 9 செக்கனில் ஆறு நட்சத்திர ஹோட்டலுக்கான அடிக்கல் நடப்படவுள்ளது. இந்நிகழ்வுக்காக நான்கு மதங்களைச் சேர்ந்த மத குருமாரும் வரவழைக்கப்பட்டிருப்பதாக ‘டச்பே ரிசோஸ்ட்’ ஹோட்டலின் தலைவர் நீல் த சில்வா கூறினார்.
‘டச்பே ரிசோட்ஸ்’ ஆறு நட்சத்திர ஹோட்டலானது 175 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளது. 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பப்பில் இயற்கையான சதுப்பு நிலத்திற்கு மத்தியில் இது அமைக்கப்படும். முதற்கட்டமாக 5 ஆயிரம் அறைகள் அமைக்கப்படவுள்ளன.
பின்னர் அவை விரிவு படுத்தப்படும். ஒரு அறைக்கு ஒரு இரவுக்கு முதற்கட்டமாக ஆகக் குறைந்தது 850 டொலர் வீதம் அறவிடத் தீர்மானித்திருப்பதாகவும் நீல் த சில்வா தெரிவித்தார்.
இரண்டு கட்டடங்களை மாத்திரமே கொண்டு உருவாக் கப்படவிருக்கும் இந்த ஆறு நட்சத்திர ஹோட்டலின் முகப்பு வழமைபோல் கடலை நோக்கி அமையாது வித்தியாசமாக ஏரிப்புறமாக அமையவிருப்பது இதன் சிறப்பம்சம் எனவும் அவர் கூறினார்.
நாட்டில் சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங் கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து ள்ளது. இயற்கை எழில் கொண்ட கற்பிட்டி பகுதிக்கான மவுசு அதிகரித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 4 ஆயிரம் அறைகள் மாத்திரமே அப்பகுதியிலுள்ள விடுதிகளில் இருக்கிறது.
இது எமக்கு கவலையளிக்கிறது. அதனை நிவர்த்தி செய்யும் விதமாக ‘டச்பே ரிசோட்ஸ்’ எனும் ஆறு நட்சத்திர ஹோட்டல் ‘சிக்ஸ் சென்ஸஸ்’ முகாமைத்து வத்தின் கீழ் அங்கு அமைக்கப்படவிருப்பது சுற்றுலாத்து றைக்கு மட்டுமன்றி இலங்கைக்கே பெருமை சேர்க்கும் விடயமென செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய இல ங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் பேர்னார்ட் குணதிலக்க தெரிவித்தார்.
WEDNESDAY, SEPTEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்
உலகிலேயே முன்னணியில் திகழும் ஹோட்டல் நிர்வாக நிறுவனமான ‘சிக்ஸ் சென்ஸஸ்’ இந்த ஆறு நட்சத்திர ஹோட்டலை முகாமைத்துவம் செய்யவிருப்பது இலங்கையின் சமாதானத்துக்கும் புகழுக்கும் கிடைத்திருக்கும் பெரும் கீர்த்தி என சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலாச் சபையில் நேற்று மாலை, கற்பிட்டியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ‘டச் பே ரிசோட்’ எனும் ஆறு நட்சத்திர ஹோட்டல் குறித்து விளக்கும் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.
இதில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் சுமார் 30 வருடகாலமாக நீடித்துவந்த பயங்கரவாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முடிவுக்கு வந்ததையடுத்து சர்வதேச தரம் கொண்ட நிறுவனங்கள் நாட்டில் முதலீடு செய்யவும் முகாமைத்துவம் செய்யவும் முன்வந்துள்ளன. இதன் மூலம் சுற்றுலாத்துறை என்றுமில்லாதவாறு உயர்ந்த ஸ்தானத்தை அடையவுள்ளதெனவும் அவர் தெரித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் சுற்றுலா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ‘டச்பே ரிசோட்ஸ்’ தலைவர் நீல் த சில்வா, இலங்கை சுற்றுலாத்துறை ஊக்கவிப்பு பணியகத்தின் தலைவர் பேர்னார்ட் குணதிலக்க, டச்பே ரிசோட்ஸ் பிரதம அபிவிருத்தி அதிகாரி பெட்ரிக் கூட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் நவீன் திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில்:- உலகின் முன்னணியில் திகழும் ‘சிக்ஸ் சென்ஸஸ்’ நிறுவனம் இலங்கை கரையோரத்துக்கு வருவது எமது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும். இது நீண்ட கால திட்டமாகும். 2011 இல் இது நிறைவு பெறுமென எதிர்ப்பாக்கின்றோம். ஆறு நட்சத்திர ஹோட்டலை அமைப்பதன் மூலம் 2010 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கற்பிட்டி டச்பே தீவில் 09-09-2009 ஆம் திகதியாகிய இன்று காலை 9 மணி 9 நிமிடமும் 9 செக்கனில் ஆறு நட்சத்திர ஹோட்டலுக்கான அடிக்கல் நடப்படவுள்ளது. இந்நிகழ்வுக்காக நான்கு மதங்களைச் சேர்ந்த மத குருமாரும் வரவழைக்கப்பட்டிருப்பதாக ‘டச்பே ரிசோஸ்ட்’ ஹோட்டலின் தலைவர் நீல் த சில்வா கூறினார்.
‘டச்பே ரிசோட்ஸ்’ ஆறு நட்சத்திர ஹோட்டலானது 175 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளது. 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பப்பில் இயற்கையான சதுப்பு நிலத்திற்கு மத்தியில் இது அமைக்கப்படும். முதற்கட்டமாக 5 ஆயிரம் அறைகள் அமைக்கப்படவுள்ளன.
பின்னர் அவை விரிவு படுத்தப்படும். ஒரு அறைக்கு ஒரு இரவுக்கு முதற்கட்டமாக ஆகக் குறைந்தது 850 டொலர் வீதம் அறவிடத் தீர்மானித்திருப்பதாகவும் நீல் த சில்வா தெரிவித்தார்.
இரண்டு கட்டடங்களை மாத்திரமே கொண்டு உருவாக் கப்படவிருக்கும் இந்த ஆறு நட்சத்திர ஹோட்டலின் முகப்பு வழமைபோல் கடலை நோக்கி அமையாது வித்தியாசமாக ஏரிப்புறமாக அமையவிருப்பது இதன் சிறப்பம்சம் எனவும் அவர் கூறினார்.
நாட்டில் சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங் கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து ள்ளது. இயற்கை எழில் கொண்ட கற்பிட்டி பகுதிக்கான மவுசு அதிகரித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 4 ஆயிரம் அறைகள் மாத்திரமே அப்பகுதியிலுள்ள விடுதிகளில் இருக்கிறது.
இது எமக்கு கவலையளிக்கிறது. அதனை நிவர்த்தி செய்யும் விதமாக ‘டச்பே ரிசோட்ஸ்’ எனும் ஆறு நட்சத்திர ஹோட்டல் ‘சிக்ஸ் சென்ஸஸ்’ முகாமைத்து வத்தின் கீழ் அங்கு அமைக்கப்படவிருப்பது சுற்றுலாத்து றைக்கு மட்டுமன்றி இலங்கைக்கே பெருமை சேர்க்கும் விடயமென செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய இல ங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் பேர்னார்ட் குணதிலக்க தெரிவித்தார்.
WEDNESDAY, SEPTEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment