Wednesday, September 23, 2009

A-9 ஊடாக 10 இலட்சம் பாடப்புத்தகங்கள் இன்று யாழ். அனுப்ப ஏற்பாடு


யாழ். குடாநாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக கல்வியமைச்சு இன்று 10 இலட்சம் பாடப்புத்தகங்களை தரைவழியாக அனுப்பி வைக்கவுள்ளது.

அடுத்த ஆண்டுக்குத் தேவையான இந்த புத்தகங்கள் ஏ-9 வீதியினூடாக எடுத்துச் செல்லப்படவுள்ளன. 28 வருடங்களுக்குப் பின்னர் இன்றே முதல் தடவையாக யாழ். குடாநாட்டுக்கு பாடப்புத்தகங்கள் கொண்டுசெல்லப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

முந்தைய வருடங்களில் யாழ். குடாநாட்டுக்கு கப்பல் மூலம் புத்தகங்களை எடுத்துச் செல்வதற்கு மூன்று மில்லியன் ரூபா செலவாகியதாகவும் ஏ-9 வீதியினூடாக இவற்றைக் கொண்டுசெல்வதற்கு தற்போது 1.3 மில்லியன் ரூபாவே செலவாகுவதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பாடப் புத்தகங்கள் எடுத்துச் செல்லும் லொறிகள் இன்று காலை 10.30 மணிக்கு கல்வி யமைச்சிலிருந்து யாழ். குடாநாடு நோக்கி புறப்படும்.
WEDNESDAY, SEPTEMBER 23, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment