
ஹக்மனை கடையொன்றில் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோட முயன்ற கொள்ளையர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு கொள்ளையர்களும் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.
இச் சம்பவம் நேற்றுக் காலை 10.45 மணியளவில் கம்புறுப்பிட்டியில் இடம் பெற்றுள்ளது. கறுவா மற்றும் இறப்பர் விற்பனை செய்யும் கடையொன்றுக்கு மோட்டார் சைக் கிளில் வந்த இரு கொள்ளையர்கள் பொருள் வாங்குவது போல் நடித்து கடையிலிருந்த இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஒன்றரை இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்க சங்கிலி ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தை கேள்வியுள்ள ஹக்மனை பொலிஸார், கம்புறுப்பிட்டிய பொலிசுக்கு தகவல் வழங்கியதையடுத்து சப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கொள்ளையர்களை விரட்டிச் சென்றுள்ளனர்.
தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக வீடொன்றுக்குள் புகுந்த இக் கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் சரமாரிமாகத் துப்பாக்கி பிரயோகம் நடந்தது. இதில் கொள்ளையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
கம்புறுப்பிட்டிய பொலிஸார் கொள்ளையர்களிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி யொன்றினையும் அவர்களது மோட்டார் சைக்கிள், கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் தங்கச் சங்கிலி ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கடையிலிருந்த இருவரும் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் மெத்திவக்க தெரிவித்தார்.
இச் சம்பவம் நேற்றுக் காலை 10.45 மணியளவில் கம்புறுப்பிட்டியில் இடம் பெற்றுள்ளது. கறுவா மற்றும் இறப்பர் விற்பனை செய்யும் கடையொன்றுக்கு மோட்டார் சைக் கிளில் வந்த இரு கொள்ளையர்கள் பொருள் வாங்குவது போல் நடித்து கடையிலிருந்த இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஒன்றரை இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்க சங்கிலி ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தை கேள்வியுள்ள ஹக்மனை பொலிஸார், கம்புறுப்பிட்டிய பொலிசுக்கு தகவல் வழங்கியதையடுத்து சப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கொள்ளையர்களை விரட்டிச் சென்றுள்ளனர்.
தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக வீடொன்றுக்குள் புகுந்த இக் கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் சரமாரிமாகத் துப்பாக்கி பிரயோகம் நடந்தது. இதில் கொள்ளையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
கம்புறுப்பிட்டிய பொலிஸார் கொள்ளையர்களிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி யொன்றினையும் அவர்களது மோட்டார் சைக்கிள், கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் தங்கச் சங்கிலி ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கடையிலிருந்த இருவரும் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் மெத்திவக்க தெரிவித்தார்.
MONDAY, SEPTEMBER 21, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment