Friday, September 18, 2009

ஐ.நா.விசேட பிரதிநிதி பெஸ்கோ வவுனியா, யாழ்., மன்னார் விஜயம்':மீள்குடியேற்றத்திற்கு ஐ.நா. உதவுமென உறுதி ஜனாதிபதி, அரசியல் கட்சிகளுடன் இன்று சந்திப்பு


இலங்கையில் இடம்பெயர்ந்து ள்ளவர்களை விரைவில் மீள குடியமர்த்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண உதவிகளை வழங்குமென ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்திருக்கும் ஐ. நா. அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் லின் பெஸ்கோ நேற்றுத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு, இலங்கை வந்த லின் பெஸ்கோ நேற்றுக் காலை யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடியகற்றும் வேலைத் திட்டங்களையும் கண்டறிந்தார்.

வடக்குக்கான தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய பெஸ்கோ நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல் லாகமவை அமைச்சில் சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார்.

நீண்ட நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் லின் பெஸ்கோ உரையாற்றினார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நிவாரணக்கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டதன் மூலம் மோதல்களுக்குப் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் குறித்து தெளிவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறதென லின் பெஸ்கோ சுட்யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை நேரில் சந்தித்துப் பேசக் கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவர்கள் எங்கிருந்து வந்துள்ளார்கள். தற்போது என்ன செய்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் உதவிகள் அம்மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் அபிலாஷைகளையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. நிவாரணக் கிராமங்களில் பணிபுரியும் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் ஐ.நா. உதவி அதிகாரிகளையும் சந்தித்து பேச்சு நடத்தியதன் மூலம் இலங்கை அரசாங்கம் இடம் பெயர்ந்துள்ளவர்களுக்காக முன்னெடுத்துவரும் உதவிகளையும் வசதிகளையும் நன்கு அறிந்துகொண்டேன் எனவும் லின் பெஸ்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


உலகின் பல நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்துள்ளேன். நான் பார்த்தவற்றிலேயே மெனிக் பாம் நிவாரணக் கிராமம் மிகவும் விசாலமானது. நிவாரணக் கிராமத்தில் வாழ்பவர்களுக்கு எத்தனை வசதிகளை செய்துகொடுத்தாலும் தமது சொந்த வீடுகளில் வாழ்வது போன்ற உணர்வு இருக்காது. இவர்கள் கூடுமான விரைவில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும். அதற்கேற்ற வகையில் கண்ணிவெடியகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டுமெனவும் நிவாரணக் கிராமங்களிலிருந்து இம்மக்களை கூடிய விரைவில் வெளியேற்ற ஐ.நா. பூரண ஒத்துழைப்பை வழங்குமெனவும் பெஸ்கோ கூறினார்.அமைச்சர் போகொல்லாகம கருத்து தெரிவிக்கையில்:-மோதல்களையடுத்து நாட்டில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிலையில், ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக லின் பெஸ்கோ இலங்கை வந்திருப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.எமது இருதரப்பு சந்திப்பின்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் உதவிகள், வசதிகள் மற்றும் வடக்கில் அபிவிருத்திப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவித்தார்.இதேவேளை லின் பெஸ்கோ இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.டிக்காட்டினார்.
FRIDAY, SEPTEMBER 18, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment