Friday, September 18, 2009

தொப்பிகலையில் வெடிபொருட்கள் மீட்பு


மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிகலை பிரதேசத்திலிருந்து இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் நேற்று பெருந்தொகையான அதி சக்தி வாய்ந்த வெடிபொருட்களை கைப்பற்றியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

தொப்பிகலை தாராவிக்குளம் காட்டுப் பகுதிக்குள்ளிருந்தே இவை நேற்றுக் காலை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

27.5 கிலோ கிராம் நிறைகொண்ட சி4 வெடி பொருட்கள் அடைக்கப்பட்ட ஒரு பிப்பாய், 2500– ரி-56 ரவைகள் அடைக்கப் பட்ட மூன்று பெட்டிகள், நான்காயிரம் இலத்திரனியல் டெட்டனேட்டர்கள் அடை க்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய் ஆகியனவே விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட் டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

FRIDAY, SEPTEMBER 18, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment